ஒற்றை தலைவலி என்பது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைவதால், ஏற்படும் கடுமையான வலி ஆகும். மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி, சில மணி நேரம் முதல் 2, 3 நாட்கள் வரை கூட நீடிக்கலாம். இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், கடுமையான வெப்பம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளது. கடுமையான தலைவலி இருக்கும்போது, பின்புற மண்டை, கழுத்து ஆகியவற்றில் வலி உண்டாகும். தலைவலி அதிகம் இருந்தால் வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகளும் இருக்கும். அதிக சத்தம் மற்றும் பிரகாசமான ஒளியை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில், ஒற்றை தலைவலியை விரட்டி அடிக்கும் சில வீட்டு வைத்திய முறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* இஞ்சியை கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் தலைவலி மட்டுமின்றி, வாந்தி மற்றும் குமட்டலையும் சரிசெய்யும்.
* பிரம்மி மற்றும் அஸ்வகந்தா ஆகியவை நரம்புகளை தளர்த்தி, மன அழுத்தத்தை குறைத்து, தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.
* ஒரு சொட்டு பசு நெய்யை பசும் பாலில் கலந்து குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலி பிரச்சனை சரியாகும்.
* இரவில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால், ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் இருக்கும்.
ஒற்றை தலைவலியை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்..?
* மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், ஒற்றை தலைவலி வராமல் தடுக்கலாம். அதோடு, தொடர்ந்து சுவாசப் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
* துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி ஒற்றைத் தலைவலியை உண்டாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.
* ஒற்றை தலைவலியை கட்டுப்படுத்த தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவதும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
* தினசரி பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை எடுத்துக் கொள்வதால், ஒற்றை தலைவலி சரிசெய்யலாம்.
* தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் தூங்கினால், ஒற்றை தலைவலியை கட்டுப்படுத்த முடியும்.