திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான விமலா (பெயர் மாற்றப்பட்டது) என்ற மென்பொருள் நிறுவன ஊழியர், கொரோனா காலகட்டத்தில், அதாவது 2021-ஆம் ஆண்டில் வேலையை இழந்துள்ளார். இதனால், நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். பின்னர், பாலியல் தொழிலில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியான போதிலும், சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டதால், தனது தோழி கீதா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரின் வழிகாட்டுதலில் இவர் தொழிலைத் தொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மீட்கப்பட்ட விமலாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டதாகவும், பல ஆண்கள் ஆணுறை அணியாமல் உறவு கொண்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி பரவியதையடுத்து, விமலாவுடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் தற்போது எச்.ஐ.வி. தொற்று பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
இது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுவதால், கர்நாடக மாநிலம் தாவா மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை இணைந்து, பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்டறிந்து பரிசோதனை செய்வதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளன. இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



