பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!! ஆங்கில ஆசிரியரை தட்டித் தூக்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரைச் சேர்ந்தவர் விநாயக சவுத்திரி (44). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விநாயக சவுத்திரி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் சிலர் வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தலைமை ஆசிரியை மலர்மதி, பள்ளி மேலாண்மை குழுவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதையடுத்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி மேலாண்மை குழு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியிடம் வழங்கினர்.


இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முத்துக் கண்ணன் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தினார். இதில் மாணவிகளுக்கு ஆசிரியர் விநாயக சவுத்திரி பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துக் கண்ணன் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் விநாயக சவுத்திரியை கைது செய்தனர்.

CHELLA

Next Post

பிளஸ்2 மாணவனை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளம்பெண்..!! திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

Sun Apr 16 , 2023
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், வீட்டில் பெற்றோருடன் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், மாணவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். ஆனால், மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து மகனை காணவில்லை என வெள்ளக்கோவில் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், […]

You May Like