சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய வழக்கில் 2️ பேருக்கு 5️ ஆண்டு கடுங்காவல்…..! திண்டுக்கல் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (28) இருவரும் இணைந்து அதே பகுதியில் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து அவரிடம் அத்து மீறியதாக சொல்லப்படுகிறது.


இதுகுறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு வாங்கியதாக சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். ஆகவே பரத்குமார் மற்றும் அஜித் உள்ளிட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கில் பழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற தேர்வு நடைபெற்று வந்தது. இத்தகைய நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த சூழ்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்ட பரத்குமார் மற்றும் அஜித் உள்ளிட்ட இருவருக்கும் தல 5 வருடங்கள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இந்த தீர்ப்பை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு…..! நீதிமன்றம் இன்று எடுக்கப் போகும் முக்கிய முடிவு…..!

Thu Jun 15 , 2023
நேற்று முன்தினம் இரவு அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்படுவதற்கான வாரன்டை அவரிடம் வழங்கினர் ஆனால் அதை அவர் வாங்க மறுத்து விட்டார். பின்னர் அவரை கைது செய்து நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். இந்த நிலையில் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்து […]
images 2 16

You May Like