வேலூர் மாவட்டம் ஊசூர் பகுதியில் தனது சித்தியுடனான கள்ளக்காதலை மறைக்க, மனைவியையே கொலை செய்ய துணிந்த ஒரு கணவனின் கொடூர முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேஷ்குமார் – அனுசுயா தம்பதியினரின் 13 ஆண்டுகால மணவாழ்க்கை, ஒரு ரகசிய ஆடியோ பதிவால் இன்று சிதைந்து போயுள்ளது.
வழக்கம்போல மதுபோதையில் வந்த ராஜேஷ்குமார் வாசலில் விழுந்து கிடக்க, அவரைத் தூக்க முயன்ற அனுசுயாவின் கையில் தற்செயலாக கணவனின் செல்போன் கிடைத்துள்ளது. அதில் இருந்த ஆடியோ பதிவை சோதித்தபோது, ராஜேஷ்குமார் தனது சொந்த சித்தியான மேரியுடன் ஆபாசமாகப் பேசியதும், இருவரும் இணைந்து அனுசுயாவை கொலை செய்யத் திட்டமிட்டதும் அம்பலமானது.
இந்த ஆதாரத்தைக் கொண்டு குடும்பப் பெரியவர்களிடம் முறையிட்டும், ராஜேஷ்குமார் திருந்துவதற்குப் பதிலாகத் தனது உறவைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மேரியுடன் வெளிப்படையாக சுற்ற தொடங்கியது அந்தப் பகுதியினரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த விபரீத உறவு குறித்த பேச்சு ஊர் முழுவதும் பரவியுள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அனுசுயா தற்போது காவல் நிலையத்தை நாடியுள்ளார்.
இதேபோன்று உத்தரப் பிரதேசத்திலும் ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு 5 ஆண்டுகளாக குழந்தையில்லாத ஒரு நபர், திடீரென ஒரு குழந்தையை தத்தெடுத்து வந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், விசாரணையில் அந்தக் குழந்தை அவருக்குத் தனது சின்ன மாமியார் மூலமாகப் பிறந்தது என்ற உண்மை வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாமியாரை ரகசிய இடத்தில் தங்கவைத்து, குழந்தை பிறந்த பின் அதைத் தத்தெடுத்த நாடகமாடியது அம்பலமானது குறிப்பிடத்தக்கது.



