“நடிச்சது வெறும் 5 படங்கள் தான்”..!! “ஆனா இப்போ லெவலே வேற”..!! ரூ.300 கோடிக்கு சொந்தக்காரியான பிரபல தமிழ் நடிகை..!!

Shalini 2025

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர்கள், தாங்கள் வளர்ந்த பிறகு நடிக்கும் படங்களில் பிரபலம் ஆவதில்லை. அப்படி பிரபலமானவர்களில் ஹீரோக்களே அதிகம். ஆனால் ஹீரோயின் ஒருவர் குழந்தை நட்சத்திரத்திலும், ஹீரோயினாக நடிக்கும் போதும் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அந்த நடிகை யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.


அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஷாலினி தான். இவர், முதல் முறையாக 4 வயதில் மலையாளத்தில் வெளியான ‘என்டே மாமாட்டிக்குட்டியம்மாக்கு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். முதல் படத்திலேயே கேரள அரசின் விருதை பெற்றார். அதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல படங்களில் நடித்தார்.

தமிழில் இவர் நடித்த முதல் படம் ’காதலுக்கு மரியாதை’. இப்படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்து பிரபலம் ஆனார். அந்த வகையில், 1999ஆம் ஆண்டு அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தார் ஷாலினி. அப்போது தான், இருவருக்கும் காதல் ஏற்படவே, திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அஜித்தை திருமணம் செய்வதற்கு முன்பு அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும், கண்ணுக்குள் நிலவு ஆகிய படங்களில் கமிட் ஆகியிருந்தார். பின்னர், இப்படங்களை நடித்து கொடுத்த பின் சினிமாவை விட்டே விலகினார்.

ஷாலினி, 5 படங்களோடு சினிமாவை விட்டு விலகியிருந்தால், தற்போது அவர் கோடீஸ்வரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடைசியாக சினிமாவில் படம் நடிக்கும் போதே இவர், ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம். அப்படி டாப் நாயகியாக வலம் வந்த ஷாலினியின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் அவரது கணவர் அஜித்தின் சொத்து மதிப்பு தற்போது ரூ.300 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Read More : மாணவர்களுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

CHELLA

Next Post

அந்த மனசு இருக்கே.. அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு மெதுவடை தேங்காய் சட்னி கொடுத்த இந்திய பெண்..!! ரியாக்ஷனை பாருங்க..

Sat Jun 7 , 2025
அமெரிக்காவில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, இந்திய பெண் ஒருவர் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி உணவாக அளித்த நிலையில், அதை பார்த்த அந்த தொழிலாளர்கள், “இப்படி ஒரு உணவா! என மெய்சிலிர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், ஒரு இந்திய பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தென்னிந்தியாவில் மிக பிரபலமான மெதுவடையை அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சமைத்து, அருகில் […]
us worker meduvada treat

You May Like