சிவனும் பெருமாளும் ஒரே இடத்தில்.. பிள்ளை வரம் அருளும் பூலோகநாதர் ஆலயம்..! எங்க இருக்கு தெரியுமா..?

38874553 boologanathar temple

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டிக்கு அருகேயுள்ள நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ள புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோயில் தொன்மை, ஆன்மிக மகிமை மற்றும் சிறப்புப் பண்புகளை ஒரே சேரக் கொண்ட புனிதத் தலம்.


சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் பேரரசர் ராஜேந்திர சோழன் இதனை சிறப்பு கட்டிடக்கலையுடன் கட்டியதாக வரலாறு குறிப்பிடுகிறது. பல காலம் பராமரிப்பின்றி இருந்த இத்தலம், சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு வையாபுரி பரதேசி சுவாமிகள் கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்தனர். இன்று இதுவே பக்தர்களுக்குப் புண்ணியச் சடங்குகள் நடைபெறும் தலமாக விளங்குகிறது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை இதனை பராமரிக்கிறது.

கோயிலின் தனிச்சிறப்புகள்: இந்த கோயிலின் பிரதான மூர்த்தர் பூலோகநாதர், பூமி உயிர்களையும் காக்கும் சக்தி கொண்ட இறைவன் என பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலத்தில் சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால், இரண்டு தெய்வங்களை ஒரே நேரத்தில் தரிசிக்க முடிவது மிகச் சிறப்பாகும்.

  • கிழக்கே – உயரமான ராஜகோபுரம்
  • தென்கிழக்கில் – மகாகணபதி
  • வடகிழக்கில் – பாலசுப்ரமணியர்
  • உள்புறம் – மஹாலட்சுமி, சூரியன், சந்திரன், தட்சணாமூர்த்தி, பிரம்மா
  • வடக்கு – தனி சன்னதியாக காலபைரவர்
  • தெற்கு வாயிலில் நுழையும் போது – பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

மேற்கே பூலோகநாதர், வடக்கே பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வடகிழக்கில் ஆஞ்சநேயர் ஆகியோரை ஒரே பார்வையில் தரிசிக்க முடியும். கருவறையில் புவனாம்பிகை சமேத பூலோகநாதரை ஒரே இடத்தில் பார்க்கும் அனுபவம் பக்தர்களுக்கு ஆழமான ஆன்மிக மகிழ்ச்சி அளிக்கிறது.

பூமி சார்ந்த பிரச்சனைகள், திருமணத் தடைகள், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் அகலும் என்பதே பக்தர்களின் நம்பிக்கை. கோயிலில் வலம் வந்து, மணலில் நடந்து செல்லும் இடம் பூலோக தரிசனத்தை குறிக்கிறது என்றும், அக்குபஞ்சர் சிகிச்சை போன்ற நன்மைகள் கால்களுக்கு ஏற்படும் என நம்பப்படுகிறது.

Read more: பிரிட்டிஷ் வைஸ்ராயின் மனைவியுடன் நேருவின் தடை செய்யப்பட்ட காதல்: கடிதங்கள், புகைப்படங்கள்.. ஒரு சொல்லப்படாத உண்மை!

English Summary

Shiva and Perumal are in the same place.. boologanathar Temple, which bestows the boon of a child..! Do you know where it is..?

Next Post

3 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Sat Nov 15 , 2025
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் […]
cyclone rain 2025

You May Like