மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் ஹவுரா, கொல்கத்தா, ஹுக்ளி , முர்ஷிதாபர் , தெற்கு பர்கானாஸ் , ஜர்பைல்குரி மற்றும் டார்ஜீலிங் ஆகிய மாவட்டங்களில் அதிகஅளவில் டெங்கு காய்ச்சல் பரவி அதிகம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேற்கு வங்கம் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு மாநிலங்களில்இந்த பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பருவமழை முடிந்து கொசுக்கள் உற்பத்தி அதிகரித்திருப்பதால் அடுத்த சில மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் கொசுவராமல் தடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிய போது தமிழ்நாட்டில் நில வேம்பு கஷாயம் போன்றவை குடிக்க வழங்கப்பட்டது. மேலும் , சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுவீடாக சென்று ஆராய்ச்சி மேற்கொண்டனர். திறந்தவெளி தண்ணீர் தொட்டி இருந்தால் அதை மூடிவைக்க அறிவுறுத்தினார்கள். முடிந்தவரை நாம் அதையே பின்பற்ற வேண்டும்.
தடுக்கும் முறை – 1) தண்ணீர் தொட்டியில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
2) திறந்தவெளி தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
3) கொசுகடிக்காதவாறு கால் , கைகள் மறைக்கும் ஆடைகளை அணியவேண்டும்.
4) கொசுவலை பயன்படுத்தி பாதுகாப்பாக உறங்க வேண்டும்.
5) கொசுவிரட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.