ஷாக் நியூஸ்..!! பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி

பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனை செய்தபோது, அதில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் இருந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தொடர்ந்து தகவல் வந்துள்ளது. இதையடுத்து, மாணவர்களின் பைகளில் ஆசிரியர்கள் சோதனை நடத்தினர். இதில் சில மாணவர்களில் பைகளில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஆணுறை, கருத்தடை மாத்திரை, சிகரெட்டுகள் ‘லைட்டர்’கள், போதைக்காக பயன்படுத்தும் ‘ஒயிட் னர்’கள், அதிகமான பணம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. மேலும், மாணவர் ஒருவரின் தண்ணீர் பாட்டிலில், மதுபானம் நிரப்பப்பட்டிருந்தது.

ஷாக் நியூஸ்..!! பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி

இதை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு, மாணவர்களை எச்சரிக்கையாக கையாளும்படி, பெற்றோருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களை நல்ல வழியில் கொண்டு பெற்றோர்களின் கடமையும் ஒன்று என்று அறிவுறுத்தினர். தற்போது மாணவர்களுக்கு, 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளோம். மாணவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஷாக் நியூஸ்..!! பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி

மேலும், பெங்களுருவில் 80 சதவீதம் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், மாணவர்களின் பள்ளியில் வயதுக்கு மீறிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் அம்மாநிலத்தேயே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே பெற்றோர் வரவழைக்கப்பட்டு அறிவுரை அனுப்பி கூறி அனுப்பினர். சமீப நாட்களாக சிறார்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. இளம் வயதிலேயே சிறார்கள் புகை பிடிப்பது, மதுபானம் அருந்துவது, வீட்டுக்கு தெரியாமல் பணம் திருடுவது, ஊர் சுற்றுவது, மொபைல் போன்களில் ஆபாச படங்கள் பார்ப்பது உட்பட பல விதமான தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை, மாணவர்கள் போன் பயன்படுத்த, பெற்றோர் வாய்ப்பளிக்காத நிலை இருந்தது.

கொரோனா தொற்று பரவிய பின், அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு புதிதாக மொபைல் வாங்கிக் கொடுத்தனர். தற்போது, கட்டுக்குள் வந்து, மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வரத் துவங்கி விட்டனர். ஆனால், மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை.

CHELLA

Next Post

காதலியின் தோழிக்கு ரூட் விட்ட காதலன்..! தட்டிக்கேட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Dec 1 , 2022
லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த காதலியைக் காதலனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபால் நாட்டைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் தமி, கிருஷ்ண குமாரி. காதலர்களான இவர்கள் இருவரும் பெங்களூரு நகரில் வாடகைக்கு வீடு எடுத்துக் கடந்த ஒரு வருடமாக ’லிவிங் டுகெதர்’ முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், சந்தோஷ் தமி கடந்து 3 வருடங்களாக பெங்களூருவில் ஸ்பா ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் […]
murder illegal affair

You May Like