அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்..!! அகவிலைப்படி..!! இனி வாய்ப்பே இல்லையாம்..!! மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படியின் 18 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதனை கொடுக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்தில் அகவிலைப்படியை பெறவில்லை. கொரோனா தொற்றால் ஏற்பட்ட அசாத்திய சூழல் காரணமாக அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டது. கடந்த காலங்களில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகை கோரிக்கை தொடர்பாக அமைச்சரவை செயலாளரையும் சந்தித்தனர்.

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்..!! அகவிலைப்படி..!! இனி வாய்ப்பே இல்லையாம்..!! மத்திய அரசு அதிரடி

ஆனால், நிலுவைத் தொகை குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், நிலுவைத் தொகை கோரி ஊழியர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இது தொடர்பாக பிரதமரிடமும் முறையிட்டனர். ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய 18 மாத நிலுவைத் தொகையை கொடுக்க வாய்ப்பில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

CHELLA

Next Post

மேட்ரிமோனியலில் சிக்கிய கேரளத்து பெண்..!! கேட்கும்போதெல்லாம் பணத்தை வாரி கொடுத்த ஆசிரியர்..!!

Thu Dec 15 , 2022
கேரள பெண்ணை திருமணம் செய்யும் ஆசையில் ஆசிரியர் ஒருவர் ரூ.8.50 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் சண்டூரில் உள்ள தனியார் பள்ளியில் தேவேந்திரப்பா (40) என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார். இவர் திருமணத்துக்காக பெண் வேண்டி, ‘மேட்ரிமோனியல்’ தளத்தில் பதிவு செய்திருந்தார். இவரின் பதிவைப் பார்த்த கேரளாவை சேர்ந்த ஹர்பிதா என்ற பெண், தேவேந்திரப்பாவை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ள […]
marriage fb 020419062152

You May Like