ஹனிமூன் போன கோபிக்கு காத்திருந்த ஷாக் ! பரிதாபமான நிலையில் கோபி !

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஹமூன் சென்றபோது என்ன நடக்குதுனு பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள்மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற தொடர் பாக்கியலட்சுமி . இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு , முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிடுவார். கணவரின் துரோகம் தெரிந்து பாக்கியலட்சுமி அவரை விவகரத்து செய்கின்றார் . வீட்டை விட்டும் வெளியேற்றுகின்றார்.


கிடைத்தது வாய்ப்பு என கோபியும் குடும்பத்தை எதிர்த்து ராதிகாவை திருமணம் செய்து கொள்கின்றார். இதனால் ரசிர்கள் பலரும் பல கதாப்பாத்திரத்தை மோசமாக திட்டி தீர்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியான புதிய ப்ரோமோ அல்டிமேட்டாக உள்ளது.

அதில், ராதிகா, கோபியுடன் ஹனிமூன் செல்கிறார். அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் இணைந்து வந்துள்ளனர். இந்நிலையில் கோபியை கண்ட பாண்டியன் ஸ்டோர் கண்ணன் அவரது ரூமிற்கு சென்று அட்டகாசம் செய்கின்றார். அப்பொழுது ரூமில் ராதிகாவை கண்ட அவர் கோபி திருமணம் செய்துகொண்டது தெரியாமல், அக்காவிற்கு துரோகம் செய்கின்றீர்களா? இதை வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறேன் என ஆவேசமாக செல்கிறார். இதனால் கோபி தவித்துப்போயுள்ளார்.

Subscribe to my YouTube Channel

Next Post

தாய்ப்பாலில்  மைக்ரோ பிளாஸ்டிக்… அதிர்ச்சி சம்பவம் !

Mon Oct 10 , 2022
பச்சிளங்குழந்தைக்கு கொடுக்கப்பட்ட தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலியில் அறிவியல் அறிஞர்கள் ஆராச்சியில் ஈடுபட்டபோது மனித தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அறிவியல் விஞ்ஞானிகள் உள்ளனர். சமீபத்தில் இத்தாலி நாட்டின் அறிவியல் விஞ்ஞானிகள் ஆரோக்கியமான தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் எடுக்கப்பட்டு அதை சோதனைக்குட்படுத்தி மாதிரிகளை பரிசோதித்தனர். மொத்த மாதிரிகளில் முக்காவாசி பாலில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் […]
தாய்ப்பால்

You May Like