ஷாக்!. இயற்பியல் தெரிந்ததற்காக 14 ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொலையா?. உண்மை காரணத்தை வெளியிட்ட இஸ்ரேல்!.

14 Iranian Nuclear Scientists killed 11zon

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் மற்றும் ராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.


டெல் அவீவின் தரவுகளின்படி, ஈரானுக்கு எதிராக தொடங்கிய ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ தாக்குதல்களில் 14 அணு விஞ்ஞானிகளை கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. ஈரான் மேற்கொண்ட அணு ஆயுத முயற்சிகளுக்கு இந்த விஞ்ஞானிகள் கடுமையாக பாடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. “கொல்லப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளும், நிபுணர்களும் ஈரானிய அணுசக்தி திட்டத்தில் குறிப்பிடத்தக்க நபர்களாக இருந்தனர், மேலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த அனுபவத்தைக் கொண்டிருந்தனர்” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இச்செயலின் நோக்கம், தெஹ்ரானின் அணு ஆயுத மேம்பாட்டு திறனை நேரடியாக பலவீனப்படுத்தும் வகையில், அதன் முன்னேற்றத்திற்கு முக்கியமாகக் காரணமான நபர்களை குறி வைத்து நீக்கும் நடவடிக்கையாக இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விஞ்ஞானிகள் இயற்பியல் அறிந்ததால் கொல்லப்படவில்லை என்றும் அணு ஆயுதங்களை உருவாக்குவதிலும் தயாரிப்பதிலும் நேரடியாக ஈடுபட்ட போராட்டத்தில் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர் என்று பிரான்சுக்கான இஸ்ரேலிய தூதர் ஜோசுவா சர்கா பாரிஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விஞ்ஞானிகளில் இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள் மற்றும் வெடிபொருள் நிபுணர்கள் பலர் அடங்குவர். ஜூன் 13 அன்று நடந்த தாக்குதல்களின் ஆரம்ப அலையில் 14 பேரில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மீதமுள்ளவர்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இறந்தனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் கொலைவெறி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான விஞ்ஞானி கொலைகளுக்கு இஸ்ரேல் பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளது முதல் முறையாகும். இதுவரை, 2020ஆம் ஆண்டு ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்ட சம்பவத்தைப் போன்ற தாக்குதல்கள், பெரும்பாலும் மௌனமாகவோ அல்லது மறைமுகமாகவே ஏற்கப்பட்டவையாகவோ இருந்து வந்தன.

ஆனால் தற்போது இஸ்ரேல், இந்த வகையான நடவடிக்கைகளை வெளிப்படையாகவும் நேரடியாகவும் நியாயப்படுத்தும் வகையில் பேசத் தொடங்கியுள்ளது. இது கடந்த சம்பவங்களை விட மிகவும் வித்தியாசமான அணுகுமுறையாகவும் கருதப்படுகிறது.

இஸ்ரேலின் தூதவர் சார்காஸ் மேலும் கூறியதாவது, ஈரான் அணு ஆயுதம் பெற்றுவிடாமல் தடுப்பது என்பது இஸ்ரேலின் நீண்ட காலக் கொள்கையாகவே இருந்து வந்தது .”சமீபத்திய இழப்புகள், தெஹ்ரானின் அணு திட்டத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியுள்ளது. இழைத்த சேதம் ஆழமானதும், நீடித்ததுமானதும் ஆகும்,” என அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த நடவடிக்கையின் நீண்டகால செயல்திறன் குறித்து அணுசக்தி நிபுணர்கள் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் நிபுணருமான மார்க் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், “இந்தக் கொலைகளும், அணுத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் தற்காலிக தாமதங்களை ஏற்படுத்தலாம், ஆனால் ஈரானின் அணு திட்டம் முழுமையாக தகர்ந்து போய்விடும் எனக் கூற முடியாது,” என்றார்.

மேலும் இதன் ப்ளு ப்ரிண்ட் இன்னும் இருக்கிறது. இதை அடுத்த தலைமுறை PHD நிபுணர்கள் அதைத் தொடர்ந்து செயல்படுத்த முடியும்,” என மார்க் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறினார். “இந்த நடவடிக்கைகள் ஈரானின் திட்டத்தை சிறிது பின்னோக்கி தள்ளக்கூடும், ஆனால் ஈரான் ஏற்கனவே மாற்று திட்டங்களை (backups) உருவாக்கி வைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். அந்த மாற்று குழுவில் நிபுணத்துவம் குறைவாக இருக்கலாம், ஆனால் நேரம் சென்றபின் அவர்கள் அந்த பணியை நிறைவேற்றக்கூடியவர்களாக மாறுவார்கள் என்று குறிப்பிட்டார்.

Readmore: 2026 முதல் 10 ஆம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு!. CBSE ஒப்புதல்!. முழுவிவரம் இதோ!

KOKILA

Next Post

தமிழகமே..! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்... தமிழக அரசு முக்கிய முடிவு..! என்ன தெரியுமா..?

Thu Jun 26 , 2025
ரேஷன் கடைகளுக்கு மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருகிறது அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ […]
Ration 2025

You May Like