அதிர்ச்சி..!! தமிழக ராணுவ வீரர்கள் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற வழக்கு..!! சக வீரரே கொன்றது அம்பலம்..!!

பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக ஜவான் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், உறங்கிக் கொண்டிருந்த 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


அதன் பின் பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த வாரத்திற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 4 ராணுவ ஜவான்கள் விசாரிக்கப்பட்டனர். பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக அடையாளம் தெரியாத இருவர் மீது பஞ்சாப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சாட்சியான மேஜர் அசுதோஷ் சுக்லாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொல்லப்பட்ட 4 ஜவான்கள் சாகர், கமலேஷ், சந்தோஷ் மற்றும் யோகேஷ் என அடையாளம் காணப்பட்டது.  அதில் தமிழர்களும் அடக்கம். 

கடமை முடிந்து அவர்கள் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​முகமூடி அணிந்த இருவர், ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியதும், அதன் பின் அந்த 4 ஜவான்களும் அவர்களது அறைகளில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது கிடந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தான் விசாரணையின் போது குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 4 பேரும், பீரங்கி படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள். இராணுவ அறிக்கையின்படி, இந்த சம்பவத்தில் பணியாளர்களுக்கு வேறு காயங்களோ அல்லது சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை. கடந்த இரண்டு நாட்களாக INSAS துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்கள் காணாமல் போனதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் சில பணியாளர்கள் இருக்கலாம் என்றும் ராணுவம் தெரிவித்திருந்தது. 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, வழக்கின் உண்மைகளை கண்டறிய பஞ்சாப் காவல்துறையுடன் இராணுவம் கூட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஜவான் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் பாண்டேவிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த சம்பவம் குறித்த விளக்கத்தைப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CHELLA

Next Post

இந்த சீசனுடன் ஓய்வு பெறுகிறீர்களா?... செய்தியாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தல தோனி!

Tue Apr 18 , 2023
ஓய்வு முடிவைப்பற்றி யோசிப்பதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்றும் தற்போது எதையும் கூறி பயிற்சியாளரை மன அழுத்தத்தில் விடுவதற்கு விரும்பவில்லை என்று சென்னை அணியின் கேப்டன் தல தோனி கூறியுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. அன்றுமுதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தல தோனி இருந்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2019 […]
dhoni retirement

You May Like