ஷாக்கிங்..!! கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு..!! மத்திய அரசு பரபரப்பு பதில்..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் நடந்த இன்றைய கூட்டத்தொடரின் போது மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், கொரோனா காலத்திற்குப் பின்னர் திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கொரோனா காலத்திற்குப் பின்னர் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பின்னர் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு ஆய்வுகளையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை எனவும் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

CHELLA

Next Post

புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை..!! முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு..!!

Fri Mar 17 , 2023
புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் இனி இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பட்ஜெட்டில் அரசுப் பேருந்தில் பட்டியலின பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது, சட்டப்பேரவையில் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் இனி இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல், புதுச்சேரியில் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காரைக்காலில் சமீபத்தில் கனமழை காரணமாக […]
Pondi Rangasamy

You May Like