மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tasmac 2025

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயப் பிரமுகர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது வழக்கம்.

அதிகப்படியான மக்கள் கூடுவதால், கூட்ட நெரிசல் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட சூழலில், தேவையற்ற மோதல்கள் அல்லது சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதைத் தடுக்கும் வகையிலும், விழா அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும், மாவட்ட நிர்வாகங்கள் இந்த முக்கிய விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்களுக்கும், சிவகங்கை மாவட்டத்திலும் இதே 3 நாட்களுக்கும், அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். விடுமுறை நாட்களில், சட்டவிரோதமாகக் கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : தலைமை மீது அதிருப்தி..? திமுகவில் சாரை சாரையாக இணைந்த அதிமுக நிர்வாகிகள்..!! அதிர்ச்சியில் இபிஎஸ்..!!

CHELLA

Next Post

IRCTC-யில் பணியாற்ற ஆசையா..? தேர்வு கிடையாது.. சென்னையில் நேரடி இன்டர்வியூ..!! உடனே கிளம்புங்க..

Sun Oct 26 , 2025
IRCTC has announced a total of 64 Hospitality Monitor vacancies in the Southern Zone.
railway 2025

You May Like