அரசு ஊழியர்கள் பென்சன் வாங்குபவர்கள் தலையில் இடி.. புதிய ஊதியக் குழு எப்போது..? எல்லாம் போச்சே!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8-வது மத்திய ஊதியக் குழு (CPC) இன்னும் அமைக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1.2 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி திருத்தம் குறித்து இந்த ஆணையம் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2025 ஜனவரி 16 அன்று 8-வது ஊதியக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், இதுவரை அதன் தலைவர் அல்லது உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், ஆணையத்தின் பணி விதிகள் (Terms of Reference – ToR) கூட இன்னும் அறிவிக்கப்படாததால், குழுவின் செயல்பாடுகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முந்தைய 7-வது ஊதியக் குழு 2013 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு, 2014 பிப்ரவரிக்குள் தலைவர் மற்றும் பணி விதிகள் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், 8-வது குழுவின் முன்னேற்றம் அதைவிட மிகவும் மெதுவாக உள்ளது. இதனால், சம்பள திருத்தம் 2027க்கே சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

வரலாற்று ரீதியாக, ஒவ்வொரு ஊதியக் குழுவும் அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். எனவே, 8-வது குழு 2026 தொடக்கத்தில் பணியை ஆரம்பித்தால், அதன் இறுதி அறிக்கை 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பளமும் ஓய்வூதியமும் திருத்தப்படும். அதனால், புதிய சம்பள திருத்தம் 2027 நடுப்பகுதியில் அல்லது 2028 தொடக்கத்தில்தான் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. உதாரணமாக, 7-வது ஊதியக் குழு 2014 பிப்ரவரியில் அமைக்கப்பட்டு, 2015 நவம்பரில் அறிக்கை சமர்ப்பித்து, 2016 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது. அதேபோல், 8-வது குழுவும் 2026 ஜனவரி 1 முதல் மாற்றங்களை அமல்படுத்தும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த குழு செயல்படத் தொடங்கியதும், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், பாதுகாப்புப் படையினர் உட்பட 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் சம்பள உயர்வால் பயனடைவார்கள். மேலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அகவிலைப்படி (DA) திருத்தம், அடிப்படை ஊதிய உயர்வு மற்றும் அலவன்ஸ் மாற்றங்கள் ஆகியவற்றையும் இந்த ஆணையம் பரிசீலிக்கும்.

2016ல் அமல்படுத்தப்பட்ட 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2026 வரை செல்லுபடியாகும். ஆனால், அதன் அடுத்தடுத்த மாற்றம் குறித்து இன்னும் அரசு தீர்மானிக்காததால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் அடுத்த ஊதிய திருத்தத்திற்காக நீண்ட காத்திருப்பில் உள்ளனர்.

Read more: உஷார்!. 99% மாரடைப்புகளை தடுக்க முடியுமா?. ஒரு வருடம் முன்பே தோன்றும் 4 முக்கிய அறிகுறிகள்!.

English Summary

Shocking news that government employees have gone to get their pensions.. and then a salary hike..?

Next Post

முன்னாள் பள்ளி மாணவனுடன் உல்லாசம்..!! வீடியோவை பார்த்து அடுத்தடுத்து வந்த சிறுவர்கள்..!! கதறிய ஆசிரியை..!!

Tue Oct 14 , 2025
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஒரு பள்ளி ஆசிரியைக்கும் அதே பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ள உறவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அந்த ஆசிரியை, பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட ஒரு முன்னாள் மாணவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், அந்த […]
Sex 2025 1

You May Like