கணவருடன் சண்டையிட்டு தந்தையின் வீட்டிற்கு வந்த இளம்பெண், தனது தங்கையை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசித்து வரும் பெண்மணிக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது, 24 வயதாகும் இளம்பெண் தனது 18 வயது தங்கை உறங்கிக்கொண்டு இருக்கும்போது, அவரிடம் ஓரினச் சேர்க்கை பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்துள்ளார். தூக்கத்தில் இருந்த தங்கை பதறியபடி எழுந்து, அக்காவை கண்டித்துள்ளார். தங்கையின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத அக்கா, தனது சொந்த தங்கையை ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் மனதளவில் கடுமையான பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண்ணின் தங்கை, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.