ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார். இவரின் மகன் பாரத் (21) சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில், பாரத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனையறிந்த தந்தை, உன்னை விட வயதில் பல மடங்கு மூத்த பெண். அப்படி இருக்கும்போது இந்த பழக்கம் வேண்டாம் என்று கண்டித்துள்ளார். ஆனாலும் பாரத், தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
இதனால், டெல்லி பாபு சித்தூர் ரெண்டாவது டவுன் போலீசில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். போலீசார் பாரத்தை அழைத்து இனி மேல் அந்த பெண்ணுடன் உறவு வைக்கக் கூடாது என்று கண்டித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாரத், வீட்டிற்கு வந்ததும் தனது கள்ளக்காதலிக்கு வீடியோ கால் செய்திருக்கிறார். நம் உறவுக்கு தடையாக இருக்கும் என் அப்பாவை அடித்து உதைக்க போகிறேன். நீ பார்த்து ரசி என்று சொல்லிவிட்டு, தந்தையை தூணில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியிருக்கிறார். இதை கள்ளக்காதலை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்திருக்கிறார். தன் காதலி மேலும் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கட்டையை எடுத்து வந்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. வலி தாங்க முடியாமல் அலறிய டெல்லி பாபுவால், அக்கம்பத்தினர் ஓடி வந்துள்ளனர். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தந்தையை கொடூரமாக தாக்கிய பரத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.