இந்தியாவை பொறுத்தவரையில் பலர் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆகவே பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்துகிறது. அதனடிப்படையில், தற்சமயம் ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்சமயம் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் மேலும் நீண்ட தூர பயணத்தை குறைக்கும் நோக்கமாக, வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3 வகையிலான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் முன்பே தெரிவித்து இருந்தார். தற்சமயம் வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்திருக்கிறது.
24 மாநிலங்களில் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்களின் மூலமாக 27 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தான், படுக்கை வசதியை கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ரயில்வே துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.