முன்னாள்‌ படைவீரர்களுக்கு வரும் 14-ம் தேதி சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌…! ஆட்சியர் அறிவிப்பு…

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 14.07.2023 அன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்:சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 14.07.2023 அன்று பகல்‌ 10.30 மணிக்கும்‌, அதனை தொடர்ந்து முன்னாள்‌ படைவீரர்களுக்கான தொழில்‌ முனைவோர்‌ கருத்தரங்குமாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்ட அரங்கில்‌ நடத்தப்பட உள்ளது.


மேற்படி குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ சேலம்‌ மாவட்ட முன்னாள்‌ படைவீரர்கள்‌ தங்களது கோரிக்கைகளை இரட்டைப்‌ பிரதிகளில்‌ விண்ணப்பம்‌ வாயிலாக நேரில்‌ சமர்ப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! 75% மேல்‌ மதிப்பெண்‌ பெற்ற மாணவர்களுக்கு இலவச சைக்கிள்...! அரசு அதிரடி உத்தரவு...!

Thu Jul 6 , 2023
அசாம் மாநிலம் முழுவதும் உள்ள 4,372 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 3,78,000 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கவுகாத்தியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) போர்டல் மூலம் சைக்கிள்களை வாங்குவதற்கு ரூ.167.95 கோடியை மாநில அரசு அனுமதித்துள்ளது. இந்த திட்டம் குறித்து அசாம்‌ முதல்வர்‌ ஹிமந்த பிஸ்வா […]
Langting High School 1

You May Like