ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு அகவிலைப்படி 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, இந்த தொகையானது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி தொகை வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய இணை அமைச்சர் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நிதி பிரச்சனையால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி முடக்கப்பட்டது. இந்த தொகையை வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு தற்போது இல்லை என்று பதில் அளித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் புத்தாண்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அகவிலைப்படி 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் அகவிலைப்படி 42% ஆக உயரும்.