குழந்தை வரம் தரும் சிறப்பு கோயில்கள்..!! தம்பதிகளே கண்டிப்பா ஒருமுறையாவது சென்று வாருங்கள்..!!

meenatchi temple 1

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நம்பிக்கையோடு இந்த 5 கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் நிச்சயம் அதிசயம் நடக்கும் என கூறப்படுகிறது. இந்தக் கோவில்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான வழிபாட்டு முறையைக் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.


திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் தெய்வமாக மதுரை மீனாட்சி அம்மன் திகழ்கிறாள். பாண்டிய மன்னனின் குறை போக்க, அன்னை பராசக்தியே மகளாக அவதரித்த தலம் இது. இங்கு வரும் பக்தர்களுக்கு, அன்னை மீனாட்சி ஒரு தாயாக இருந்து அவர்களின் குறைகளைப் போக்கி, வேண்டும் வரங்களை அருள்கிறாள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் இந்த ஆலயம், குழந்தை வரம், கரு கலைந்து போகாமல் இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் அருள் புரியும் தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு வழங்கப்படும் பிரசாதமான நெய்யை, குழந்தை இல்லாத தம்பதியர் 40 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால், விரைவில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கர்நாடகாவில் உள்ள குக்கே சுப்ரமணியர் கோவில் நாக தோஷம் நீங்கி, குழந்தை பாக்கியம் பெற சிறந்த தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் தம்பதியர், இங்குள்ள குமாரதாரா ஆற்றில் நீராடி, சர்ப்ப சம்ஸ்கார பூஜை செய்து வழிபட்டால், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கேரளாவில் உள்ள மன்னர்சாலா கோவில், நாக தேவதைகள் வழிபாட்டிற்குப் பெயர் பெற்றது. இங்கு குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதியர், உருளி கமழதாள் என்ற சிறப்புச் சடங்கைச் செய்கின்றனர். இந்த பூஜை செய்பவர்களுக்கு, பிரசாதமாக மஞ்சள் கலவை வழங்கப்படுகிறது. இந்த மஞ்சளை வீட்டில் வைத்து வழிபட்டு, தினமும் நெற்றியில் பூசி வந்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கர்நாடகாவில் உள்ள 1800 ஆண்டுகள் பழமையான கோகர்ணா மகாகணபதி கோவில் சோழர் காலக் கோவில். இது குழந்தை வரம் அருளும் மற்றொரு தலமாகும். இக்கோவிலுக்கு வந்து குழந்தை கிருஷ்ணனுக்குப் பூஜை செய்தால், அந்தக் கிருஷ்ணனே குழந்தையாக வந்து பிறப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இது சர்ப்ப தோஷத்தையும் நீக்கும் சிறப்புமிக்க கோவிலாகும்.

Read More : அரச மரத்தடியில் பேய், ரூ.101 மொய் பணம்..!! மூடநம்பிக்கைகளுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம்..!!

CHELLA

Next Post

ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை...! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு...!

Thu Sep 11 , 2025
சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர் மீது பெறப்படும் புகார் […]
school 2025 2

You May Like