நடிகர் விஷால் பா.ஜ.க.வில் இணைவதாக வெளியான தகவலை அடுத்து ஆன்மீக கண்ணோட்டத்தில் பாருங்கள்என்று விளக்கம்அளித்துள்ளார்.
நடிகர் விஷால் காசிக்கு சென்று தரிசனம் செய்த பின் அங்கு புணரமைப்பு பணிகள் மிக சிறப்பாக மேற்கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ’’அன்புள்ள மோடி அவர்களே, நான் காசிக்கு சென்று சிறப்பான தரிசனத்தை பெற்றேன். கங்கையின் புனித நீரை தொட்டேன். கோயிலை புதுப்பித்து அதை இன்னும் சிறப்பாக மாற்றியதுடன் எவரும் எளிதாக வரும்படி செய்ததற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பிரதமர் மோடி அவர்களும் பதில் அளித்திருந்தார். ’’காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி’’என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டுகள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து விஷால் பா.ஜ.க.வில் இணைய போகின்றார் என்று வதந்திகள் கிளம்பியது. பிரதமர் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளி வந்தன.
இது குறித்து நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். ’’ ஆன்மீக கண்ணோட்டத்தை அரசியலாக பார்க்க கூடாது ’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தாஜ்மஹாலை பார்த்தால் ஷாஜகானை நாம் வியந்து பார்க்கின்றோம். அது போலத்தான் என் காசி பயணமும். பல விஷயங்களை என்னை வியக்க வைத்தது. அதனால் பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன். அவர் இதற்கு பதில் அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என தெரிவித்தார்.