தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் சென்னைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் பயணம் மேற்கொண்டு வந்தார். கடலூர் வந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து கடலூரில் மாவட்ட மருத்துவ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நேற்று தமிழக சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றம் போன்ற நிகழ்ச்சிகளில் நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்றார். பின்னர் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். பேட்மிண்டன் அகாடமி நிகழ்ச்சியிலும் அவர் நேற்று பங்கேற்றார்.
பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஏறி சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். கடலூர் அருகே வந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால்உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு இரவு 2 மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் கடலூரில் ரயில் நின்றபோது அங்கிருந்து இறங்கி அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.