fbpx

இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு..!! கிரிக்கெட்டில் இருந்து பும்ரா விலகல்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, டி20 உலகப் கோப்பையில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.16ஆம் தேதி துவங்கி நவ.13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன், வரும் 23ஆம் தேதி தனது முதல் போட்டியில் சந்திக்கிறது. ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய அணி அதற்கு பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு..!! கிரிக்கெட்டில் இருந்து பும்ரா விலகல்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா காயத்தால் அவதிப்பட்டு வருகின்றார். இதனால் மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு அவர் போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக பும்ரா விளையாடவில்லை. இந்நிலையில், டி20 உலகப்கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பீகார் அண்ணியுடன் கள்ளக்காதல்..!! ஓசூரில் கொடூர கொலை..!! திடுக்கிடும் பின்னணி..!!

Tue Oct 4 , 2022
அண்ணியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த வடமாநில வாலிபர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – பாகலூர் செல்லும் சாலையில் உள்ள உலியாளம் கிராமத்தில் தனியார் லேஅவுட்டில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பீகாரைச் சேர்ந்த சிவிஜிகுமார் (22), பங்காஜூ பஸ்வான் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரையும் ஒப்பந்த பணியாளர்களாக தொளுவபெட்டாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜெயக்குமார் (27) […]

You May Like