fbpx

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்..! பல இடங்களுக்கு அழைத்துச் சென்று 17 வயது சிறுமி வன்கொடுமை..!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

நேபாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிசானே. இவர், ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடியுள்ளார். இவர் மீது சமீபத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள் நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது இந்தப் புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்..! பல இடங்களுக்கு அழைத்துச் சென்று 17 வயது சிறுமி வன்கொடுமை..!

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், ”எங்களுடைய காவல்துறையினர் நாகர்கோட் மற்றும் சினமன்கள் ஆகிய பகுதியிலுள்ள விடுதிகளுக்கு சென்று சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நேபாள் கேப்டன் சந்தீப் அங்கு வந்துள்ள ஆதாரங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 17 வயது சிறுமி ஒருவர் அளித்த புகாரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி சந்தீப் லமிசானே காத்மாண்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்..! பல இடங்களுக்கு அழைத்துச் சென்று 17 வயது சிறுமி வன்கொடுமை..!

இந்த விவகாரத்தில் அவர் மீதான குற்றம் உறுதியாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. அத்துடன் இவருடைய கேப்டன் பதவியும் பறிக்கப்படும். நேபாள் அணிக்காக சந்தீப் லமிசானே 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 69 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது, சந்தீப் லமிசானே கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ளார். இவர் ஜமைக்கா அணிக்காக விளையாடி வருகிறார். இந்தாண்டு சிபிஎல் தொடரில் இவர் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Chella

Next Post

”இது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம்”..! - சோனியா காந்தி

Thu Sep 8 , 2022
”வரலாற்றுச் சிறப்பு மிக்க ராகுலின் பாதயாத்திரையை தொடங்கி வைக்க என்னால் நேரில் வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “இந்திய ஒற்றுமை பயணம்” என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும் அவருடன் […]

You May Like