fbpx

டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை..!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் ’சூப்பர் 12’ சுற்றில் இந்தியா அணி வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ’சூப்பர் 12’ சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாவே-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு இனி விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் நடத்திய பலபரீட்சையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்கிடையே, நெதர்லாந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை..!!

3வது போட்டி இந்தியா-தென்ஆப்பிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. தற்போது 4 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அதாவது, வங்காளதேசம், ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றாக வேண்டும். இந்திய அணியில் டாப்-4 வீரர்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் குறைந்தது அரைசதம் அடித்து இருக்கின்றனர். ஆனால், கே.எல்.ராகுல் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 22 ரன் மட்டும் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.

டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை..!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 133 ரன்னில் அடங்கிய இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பியதால் கடைசி ஓவரில் வெற்றியை நழுவ விட்டது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை..!!

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியில், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், அஸ்வின் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வங்காளதேச அணியில், சவும்யா சர்கார், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், நுருல் ஹசன், மொசாடெக் ஹூசைன், யாசிர் அலி, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஹசன் மமூத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Chella

Next Post

நடிகர் ரஜினிகாந்துக்கு குடை பிடித்த அமைச்சர்..!! வெறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!! சர்ச்சையை கிளப்பிய போட்டோ..!!

Wed Nov 2 , 2022
நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஒருவர் குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு சார்பில் ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு ’கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் ’கர்நாடக ரத்னா’ விருதை வழங்கினர். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் […]
நடிகர் ரஜினிகாந்துக்கு குடை பிடித்த அமைச்சர்..!! வெறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!! சர்ச்சையை கிளப்பிய போட்டோ..!!

You May Like