fbpx

விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு..!! உண்மையை உடைத்த ராகுல் டிராவிட்..!

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. முதல் 2 போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியா தொடரை வென்றுவிட்டது. இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த முறையும் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 தொடர் மூலம் தான் விராட் கோலி கம்பேக் கொடுத்திருந்தார். டி20 உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அப்படிபட்ட வீரர் ஒதுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மறுபுறம் இனி சீனியர் வீரர்கள் டி20 திட்டத்தில் இல்லை என பிசிசிஐ சொல்லி வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அவரிடம், கடந்தாண்டு வரை டி20 அணியில் விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாக இருந்தது என செய்தியாளர் கேள்வி கேட்டார். உடனடியாக குறிக்கிட்ட டிராவிட், எங்களால் அவரின் இடத்திற்கு சந்தேகம் தெரிவிக்கப்படவில்லையே, எங்களால் என்றுமே அப்படி நடக்காது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள், பார்டர் கவாஸ்கர் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என சில முக்கிய போட்டிகள் உள்ளன. பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றால், ஒரு சில தொடர்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்படும்.

விராட் கோலி தொடர்ச்சியாக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே, அடுத்த சில நாட்களுக்கு கோலி, ரோகித் உள்ளிட்ட சிலர் ஓய்வெடுத்துவிட்டு வருவார்கள். அதற்குள் டி20 தொடர்கள் நடந்துவிடும். அப்போது தான் ஆஸ்திரேலிய தொடருக்கு புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார்கள். இதுதான் உண்மையான காரணம்” கூறினார்.

Chella

Next Post

பிக்பாஸ் சீசன் 6…..! அசீம் வெற்றி பெற்றது கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லையா….?

Tue Jan 24 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பிரம்மாண்டமான முறையில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்சமயம் 6வது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி ஆரம்பமான இந்த பிக்பாஸ் ஆறாவது சீசன் கடந்த 22ஆம் தேதி முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் கடைசியில் இறுதி கட்ட […]

You May Like