பரபரப்பு…! பா.ஜ.க நிர்வாகி மீது கொடூர தாக்குதல்…! மருத்துவமனை விரைந்த அண்ணாமலை…!

மர்ம நபர்களால் வெட்டப்பட்ட பாஜக நிர்வாகியை மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பா.ஜ.க நிர்வாகி துரை தனசேகர் பதிவிட்டுள்ளார். திருக்கழுகுன்றம் காவல் நிலையத்திற்க்கு பா.ஜ.க நிர்வாகி தனசேகர் மற்றும் கஞ்சா வியாபாரம் செய்யும் நான்கு பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இரு தரப்பினரையும் விசாரணை செய்தனர். விசாரணை முடிந்த பின்னர் தனசேகர் மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரடியாக சென்று உடல் நலம் குறித்து விசாரி த்து குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். திமுக ஆட்சியில், இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக மாறியிருக்கும் தமிழகத்தில், கஞ்சா விற்பவர்களை தட்டிக் கேட்ட பாஜக நிர்வாகி தனசேகர் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள கயவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

போதை ஒழிப்பு என்ற பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அதிகார போதையில் மிதக்காமல் முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை திறம்பட செய்வார் என்று நம்பும் மக்களை இனியும் ஏமாற்றாமல் தன் பணியில் கவனம் செலுத்துவார் என்று நம்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

இப்போ நடந்தது அப்படியே இருக்கு!!! 2015 ஆம் ஆண்டே அர்ஜென்டினாவின் வெற்றியை கணித்த பதிவு..!

Mon Dec 19 , 2022
22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் இறுதி ஆட்டத்தில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஆதிக்கமே இருந்தது. 23வது நிமிடத்தில் முதல் கோல், 36வது நிமிடத்தில் 2வது கோல் என 2-0 என்று ஆதிக்கம் செலுத்தியது அர்ஜென்டினா. உலக […]
argentina

You May Like