நடிகர் சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜக உடன் தனது கட்சியை இணைத்தார்.. தொடர்ந்து அவர் பாஜகவில் செயல்பட்டு வருகிறது.. பாஜக மேலிடம் அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது.. அதே போல சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பாஜகவோடு இணைந்த நிர்வாகிகளுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்விலும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தற்போது வரைக்கும் பாஜக எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை..
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சரத்குமாரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. எனவே இன்று தனது ஆதரவாளர்களுடன் சரத்குமார் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.. இந்த ஆலோசனைக்கு பின் , தனது நிலைப்பாடு குறித்து அவர் கருத்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் பாஜகவில் இருந்து சரத்குமார் விலகப் போவதாக தகவல் வெளியானது..
இந்த நிலையில் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவலுக்கு பாஜக நிர்வாகி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று ஆதரவாளர்களுடன் நடைபெற உள்ள ஆலோசனை வழக்கமான ஒன்று எனவும் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவில் தமக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என கூறப்படுவது முற்றிலும் தவறு என்றும், பாஜகவில் இருந்து வெளியேற போவதாக வெளியான தகவலும் தவறான தகவல் எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Read More : டெல்லி சென்றது ஏன்? அமித்ஷா உடன் பேசியது என்ன? டிடிவி தினகரன் விளக்கம்..!



