ஓசூரில் பிட்காயின் மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு சீல் …..

ஒசூரில் செயல்பட்டு வரும் ஏகே ஸ்டாக் நிறுவனத்தில் பிட்காயின் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஒசூரின் பிரதான பகுதியில் ஏ.கே.ஸ்டாக் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அருண்குமார் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதில் பிட்காயினில் முதலீடு செய்வதால் விரைவில் பணம் இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படும் எனக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.


போச்சம்பள்ளியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்தவர்கள் அளித்த புகாரில் இந்நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரமாக சோதனை நடத்தினர். நாமக்கல் டி.எஸ்.பி.தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

பிட்காயின் மோசடி குறித்து பணியாற்றும் ஊழியர்கள், உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன் அப்பகுதி மக்களுக்கு இது போன்ற நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என கூறி அறிவுறுத்தினர்.

Next Post

கணவனை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்த மனைவி... பகீர் சம்பவம்..!

Sun Sep 18 , 2022
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் இருக்கும் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ண பள்ளியில் வசிக்கும் அகிலா, ஸ்ரீகாந்த் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இந்த கல்யாணத்திற்காக ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி அறிந்த அகிலா, […]
Untitled 112

You May Like