அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அறிவித்துள்ள நிலையில், முதலில் நீங்கள் நிறுத்துங்கள், பின்னர் போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம் என்று ஈரான் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ஈரான் அல்லது இஸ்ரேலிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. இருநாடுகளிடையே நிலவும் ஏவுகணை தாக்குதலில் 12 நாட்களுக்குப் பிறகு, ஈரான்-இஸ்ரேல் போரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நோக்கி அமெரிக்க அதிபர் முன்முயற்சி எடுத்துள்ளார்.
டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ‘ட்ரூத் சோஷியல்’ இல் பதிவிட்டுள்ளதாவது, “எல்லாம் திட்டத்தின் படி நடந்தால், அது நடக்கும் என்று நான் நம்புகிறேன், இந்த 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தைரியத்தையும் உறுதியையும் காட்டியதற்காக ஈரான் மற்றும் இஸ்ரேல் இரண்டையும் நான் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளும் தங்கள் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு முடித்துக் கொள்ளும் என்றும், பின்னர் 12 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் தொடங்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் முதலில் போர் நிறுத்தத்தைத் தொடங்கும் என்றும், பின்னர் இஸ்ரேல் 12 மணி நேரத்திற்குப் பிறகு அதையே செய்யும் என்றும் அவர் கூறினார். மொத்தம் 24 மணி நேரத்திற்குப் பிறகு இந்தப் போர் அதிகாரப்பூர்வமாக முடிந்ததாகக் கருதப்படும். இந்த நேரத்தில் இரு நாடுகளும் அமைதியாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்ளும் என்று அவர் கூறினார்.
“இந்தப் போர் பல ஆண்டுகள் நீடித்து முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கலாம், ஆனால் அது நடக்கவில்லை. அதை முடிவுக்குக் கொண்டுவர தைரியத்தையும் ஞானத்தையும் காட்டிய ஈரானையும் இஸ்ரேலையும் நான் வாழ்த்துகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பதிவில் மேலும் எழுதினார். “ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் முழு உலகத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், இந்த முன்மொழியப்பட்ட போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளும் நேர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அந்தவகையில், அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ போர் நிறுத்த அறிவிப்பை, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மறுத்துள்ளார். தாக்குதலை முதலில் இஸ்ரேல் நிறுத்தட்டும், பின்னர் போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம் என்று அப்பாஸ் அரக்சி விளக்கமளித்துள்ளார்.
Readmore: பெரும் சோகம்!. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மாரடைப்பால் மரணம்!. பிசிசிஐ இரங்கல்!.