செக்…! அரசு தேர்வில் மோடி செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை…! அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்…!

அரசு தேர்வில் ஆட்சேர்ப்பு மோசடி மற்றும் வினா தாள் கசிவு வழக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். தேர்வில் ஏமாற்றுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். “இளைஞர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளுடன் அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.

image 12

தேர்வில் மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்றார். இத்துடன் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்” என்று அவர் கூறினார். கல்சியில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாச்சார விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் தற்போது சட்டமாக மாறியுள்ளது. கடந்த வாரம், மாநிலத்தில் வேலையில்லாத நபர்களின் அமைப்பான பெரோஸ்கர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், டேராடூனின் பிரதான ராஜ்பூர் சாலையில், ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

Aero India 2023: ஆசியாவின் மிகப்பெரிய விமான காட்சி.‌..! இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி...!

Mon Feb 13 , 2023
ஆசியாவின் மிகப்பெரிய விமானக் காட்சி நிகழ்வான ஏரோ இந்தியா 2023-ஐ பெங்களூரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய விமானங்கள் மற்றும் விமான பாகங்கள் காட்சியின் 14வது பதிப்பான ஏரோ இந்தியா 2023-ஐ இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார். ‘100 கோடி வாய்ப்புகளுக்கான ஓடுபாதை’ என்ற கருப்பொருளில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைத் திறன்களில் இந்தியாவின் […]
01 6 1

You May Like