#Tn govt: மார்ச், ஏப்ரலில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு‌…! இவர்களுக்கு சிக்கல் இல்லை…!

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில்; 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இந்தத்தேர்வினை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 27 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர். இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனவும், வேறு பள்ளிகள் மூலமாக அவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

“ கருவை கலைப்பது பற்றி அந்த பெண் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்..” உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Wed Jan 25 , 2023
கருவை கலைப்பது தொடர்பாக அந்த பெண் தான் முடிவெடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. தனது கருவில் உள்ள குழந்தை உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் பிறக்கும் என்று ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்ததை அடுத்து, பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற முடிவுகளை எடுப்பது சம்மந்தப்பட்ட பெண்ணின் உரிமை […]
bigstock Silhouette Of Pregnant Young L 1200x

You May Like