‘மாண்டஸ்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ’மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ஆம் தேதியும், டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ஆம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.