மாணவர்களே..!! ஜூன் 15ஆம் தேதி தேர்வு நடக்காது..!! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

neet 2025

2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவ மேற்படிப்புகளுக்காக நீட் பிஜி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான நீட் பிஜி தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்த தேர்வுகள் 2 ஷிப்ட்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டன. ஆனால், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், NEET-PG தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உத்தரவிட்டது.

மேலும், நீட் பிஜி தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்வுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தேவைப்படும் என்பதால், நீட் முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் கலந்து கொள்ளும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருத்தமான மற்றும் பாதுகாப்பான மையங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. நீட் முதுநிலைத் தேர்வுக்கான மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு தொடர்பாக எந்த வதந்திகளையும் மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Read More : BREAKING | முடிவுக்கு வந்தது அன்புமணி – ராமதாஸ் இடையேயான அதிகார மோதல்..? தைலாபுரம் தோட்டத்தில் சமாதான பேச்சுவார்த்தை..!!

CHELLA

Next Post

"தலிபானை விட பீகாரில் நடப்பது மோசமான ஆட்சி" மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய ஊர் மக்கள்..!! - தேஜஸ்வி யாதவ் கண்டனம்

Thu Jun 5 , 2025
பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குள், கிராம மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜூராங் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர யாதவ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய்க்கு மருத்துவ உதவி வழங்கினார். இதனை விரும்பாத கிராம மக்கள் மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமான முறையில் ரத்தம் சொட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
bihar doctor

You May Like