2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளுக்காக நீட் பிஜி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான நீட் பிஜி தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்த தேர்வுகள் 2 ஷிப்ட்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டன. ஆனால், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், NEET-PG தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உத்தரவிட்டது.
மேலும், நீட் பிஜி தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்வுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தேவைப்படும் என்பதால், நீட் முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் கலந்து கொள்ளும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருத்தமான மற்றும் பாதுகாப்பான மையங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. நீட் முதுநிலைத் தேர்வுக்கான மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு தொடர்பாக எந்த வதந்திகளையும் மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.