வங்கக் கடலில் நிகழ்ந்த திடீர் மாற்றம்..!! தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Rain 2025

தமிழ்நாட்டில் நிலவி வரும் வானிலை சூழலில் அடுத்த சில நாட்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படப்போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அதே சமயம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் விளைவாக வரக்கூடிய நாட்களில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்பதால், பிப்ரவரி மாத இறுதியில் மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


இன்றைய தினம் (பிப்ரவரி 20) தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நாளை (பிப்ரவரி 21) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22-ஆம் தேதி திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், சில இடங்களில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் 23 முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை மட்டுமே பதிவாக வாய்ப்புள்ளது.

Read More : இல்லத்தரசிகளுக்கு பெரும் நிம்மதி..!! வீட்டு சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக குறைகிறது..? மத்திய அரசு மாஸ் பிளான்..!!

CHELLA

Next Post

“என்ன செய்தாலும் வேலைக்கு ஆகல”..!! அரசியலில் இருந்து ஒதுங்கும் ராமதாஸ்..? அதிர்ச்சியில் பாமகவினர்..!!

Fri Feb 20 , 2026
தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, இன்று அதன் வரலாற்றிலேயே காணாத ஒரு மிகப்பெரிய பிளவைச் சந்தித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளின்படி, பாமகவின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் ஆகியவை முழுமையாக அன்புமணி ராமதாஸ் வசமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது விசுவாசிகளை ஒன்றிணைத்து ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, தனது அரசியல் […]
ramadass 2025

You May Like