டெல்லி ராஜ்கோட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கிரிக்கெட் மைதானத்திலேயே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமை உதவியாளரான ஜிக்னேஷ் சௌஹான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜ்கோட்டின் ஊடகவியலாளர்கள் சார்பில் டி-20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமை உதவியாளரான ஜிக்னேஷ் சௌஹான் (31) கலந்துகொண்டிருந்தார். இவர் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தநிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சௌஹான் களத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி மற்றும் மூன்று வயது மகளும் உள்ள சௌவுகான், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், இந்த ஆண்டு ஜனவரியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் சேருவதற்கு முன்பு, இரண்டு வட்டார மொழி நாளிதழ்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இறுதிச் சடங்குகள் மாலை சுரேந்திரநகரில் நடைபெற்றது.