ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கும் வகையில் பிரத்யேக ஆடையை வடிவமைத்துள்ளார்.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். ஏனென்றால், மாதவிடாய் நாட்களில் உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும். இந்த உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், சில நேரங்களில் மருந்து மாத்திரைகளால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்தநிலையில், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரை சேர்ந்தவர் பௌலா.
இவர், தனது மாதவிடாய் நாட்களின் போது ஏற்பாடு வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வ இயக்கத்தை தோற்றுவித்து, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கும் ஆடையை கண்டறிய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆடையை உருவாக்கி, அதனை 250க்கும் மேற்பட்ட பெண்களிடம் கொடுத்து சோதனை நடத்தியுள்ளார். இந்த ஆடை விரைவில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளது. ஆர்ட்டெமிஸ் என்று அழைக்கப்படும் பாடிசூட், வெப்ப அலைகள் மற்றும் ஜெல் பட்டைகள் மூலமாக செய்லபடுகிறது.
டேன்ஸ் ஜெல் பட்டைகள் பிரசவத்தின்போது பெண்களுக்கு உபயோகம் செய்யப்படும் நிலையில், அதனை வைத்து மாதவிடாய் வலியை குறைக்க ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது.இவை நமது மாதவிடாய் வலியை மூளைக்கு அளிக்கும் தகவலை துண்டித்து, வெப்ப பேனல்கள் கருப்பை மற்றும் அதன் தசைகளை இலகுவாக மாற்றுகிறது. இது சோதனையிலும் வலியில்லா மாதவிடாயை ஏற்படுத்தி உறுதி செய்துள்ளது. இந்த ஆடை இந்திய மதிப்பில் ரூ.19 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவிடாய் நாட்களில் முடிந்தவரை ஓய்வு மற்றும் சத்தான உணவுகள் எடுத்துக்கொண்டாலே வலிகளில் இருந்து தீர்வு பெறலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரைகளாக உள்ளது