கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து நம்மை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. கோடைக்காலத்தில் அதிகமாக வியர்ப்பது மிகவும் சகஜம். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வியர்வை நாற்றத்தைக் குறைக்கலாம். மேலும், நீண்ட நேரம் புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம்.
கோடை மாதங்களில் வியர்ப்பது சகஜம். இந்த வியர்வையால் துர்நாற்றம், பூஞ்சைத் தொற்று, சருமப் பிரச்சனைகள் மற்றும் அசௌகரியம் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் நமது ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடும். ஆனால், வீட்டில் பயன்படுத்தக்கூடிய சில இயற்கை வழிமுறைகளைக் கொண்டு, அதிகப்படியான வியர்வை என்னும் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
வேம்பு நீர்: வேம்பின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. அதிகம் வியர்க்கும் பகுதிகளில் வேப்ப நீரைப் பூசுவது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். வேப்ப இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, தினமும் குளிக்கும்போது அந்த நீரால் உடலைத் துடைப்பது சருமத்தைச் சுத்தமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.
கிருமி நாசினி சோப்பைப் பயன்படுத்துங்கள்: தினமும் வெந்நீரில் குளிப்பதும், கிருமி நாசினி சோப்பைப் பயன்படுத்துவதும் உடலில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். இது வியர்வையால் ஏற்படும் தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகிறது.
உடலைக் குளிர்ச்சியாக வைத்திருத்தல்: கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரிலோ அல்லது பனிக்கட்டி கலந்த நீரிலோ குளிப்பது உடல் சூட்டைக் குறைக்கும். அது மன அமைதியையும் அளிக்கிறது. பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகள் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க மிகவும் உதவுகின்றன. ஒரே ஆடையை இருமுறை அணிய வேண்டாம், அவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும். உள்ளாடைகளை அடிக்கடி மாற்றி, வெயிலில் உலர்த்துவது அவசியம்.
தண்ணீர் அருந்துதல்: அன்றாட வாழ்வில் நிறைய தண்ணீர் அருந்துவது, உடலில் உள்ள வெப்பம் மற்றும் சோடியம் அளவுகளைச் சமநிலைப்படுத்த உதவுகிறது. இது வியர்வையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதேபோல், தியானம் மற்றும் யோகா மன அழுத்தத்தைக் குறைத்து, உடலைக் குளிர்விக்கின்றன.
இந்தச் சிறிய பழக்கங்கள் கோடைக்காலத்தில் நீங்கள் குளிர்ச்சியாக இருக்க உதவும். வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றத்தைத் தடுப்பதில் இயற்கையான குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Read more: 8-வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி..! 34 சதவீத சம்பள உயர்வா..?



