எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இந்த வேலையை இனி ஆன்லைன் மூலமே முடித்துவிடலாம்..!!

இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக அதாவது, பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் இனி ஆன்லைன் வாயிலாக பெற முடியும். அந்தவகையில், பாஸ்புக்கை என்ட்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அனைத்து தகவல்களையும் புதுப்பித்துக் கொள்ள முடியும்.


வங்கிகள் இந்த சேவைக்கு ஒரு குறிப்பிட்ட எண்களை வழங்கியுள்ளது. இந்த எண்களை அழைப்பதன் மூலம் இச்சேவைக்கு உங்களது எண்ணை பதிவு செய்யலாம். 1800 1234 மற்றும் 1800 2100 என்ற கட்டணம் இல்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதன்பின் கணக்கு இருப்பு மற்றும் பரிவர்த்தனை விவரங்களை பெற 1-ஐக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக உங்களது வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிடவும்.

பின் கணக்கு அறிக்கையை பெறுவதற்கு 2-ஐ அழுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வங்கி அறிக்கை காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, நீங்கள் வங்கி அறிக்கையை தேடும் காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக வங்கி அறிக்கை உங்களின் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடி (அ) தொலைபேசி எண்ணிற்கு வங்கி மூலம்அனுப்பி வைக்கப்படும்.

CHELLA

Next Post

மக்களே..!! ஒரு ரயில் தயாரிக்க எவ்வளவு கோடி செலவாகும் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

Mon May 22 , 2023
உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்கை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. தினசரி இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். ரயிலில் பயணம் மேற்கொள்வது என்பது ஈஸியானது மற்றும் மலிவானது ஆகும். எனினும் ஒரு ரயிலை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயிலில் இருக்கும் எஞ்சின் விலை அதிகமானது மற்றும் அதிகளவு செலவு ஆகும். இப்போது இந்திய ரயில்களில் 2 வகை என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் மின்சார […]
மக்களே..!! ஒரு ரயில் தயாரிக்க எவ்வளவு கோடி செலவாகும் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

You May Like