ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இலவச உணவு..!! எப்படி பெறுவது..? விவரம் உள்ளே..!!

ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், ரயில்வே வழங்கக்கூடிய இலவச உணவுடன் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போது மட்டும் தான் இந்த சேவை வழங்கப்படும். ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே வாயிலாக இலவச உணவு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ரயில்வேயின் இந்த வசதிகளை நீங்கள் எளிதாக அனுபவிக்க முடியும்.


இந்திய ரயில்வேயின் விதிகளின் படி, ரயில் தாமதம் ஏற்பட்டால் ரயில்வேயின் கேட்டரிங் கொள்கையின் கீழ் பயணிகளுக்கு காலை உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது. ரயில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்போது இந்த வசதி வழங்கப்படும். மேலும், இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ ஆகிய விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

CHELLA

Next Post

வெறும் 40 ரூபாய்க்கு இப்படி ஒரு வசதியா..? ரயில் பயணிகளே இனி கவலை வேண்டாம்..!!

Fri Apr 7 , 2023
நாட்டில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது ரயில்வேயில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நிறைய பேர் அவற்றை பயன்படுத்துவதில்லை. ரயில் பயணம் செய்பவர்கள் ரயில்வே தொடர்பான விதிமுறைகள் மற்றும் சிறப்பு விதிகள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. ரயில்களில் பயணம் செய்யும்போது சில ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நிலையில் ரயில்வே உங்களை ரயில்களில் பயணிக்க […]
train

You May Like