ஃபாஸ்டேக் முறையை ரத்து செய்து, நெடுஞ்சாலையில் உங்களது வாகனம் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறதோ அந்த தூரத்திற்கு ஏற்ப மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி அமலுக்கு வர இருக்கிறது.
ஃபாஸ்டேக் (FASTag) முறையை ரத்து செய்து புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன் மூலம் அதிகப்படியான சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கலாம். மத்திய அரசு தற்போது மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையின் மூலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலையில், வாகனங்கள் எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடுகிறதோ அதற்கான கட்டணத்தை மட்டுமே நீங்கள் செலுத்தினால் போதும். கிலோ மீட்டர்களுக்கு தகுந்தாற்போல கட்டணம் வசூலிக்கும் முறையானது ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, ரஷ்யா போன்றவற்றில் வெற்றிகரமாக செயலில் இருந்து வருகிறது. இதனால், இந்தியாவிலும் இதே நடைமுறையை அமலுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது, சுங்கச்சாவடியில் எப்படி கட்டணம் செலுத்துகிறோம் என்றால், ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மற்றொரு சுங்கச்சாவடிக்கு செல்லும் தூரம் முழுவதும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது நீங்கள் முழுமையான தூரம் செல்லாமல் இடையிலேயே நின்றாலும் நீங்கள் முழுமையான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், புதிய திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலையில் உங்களது வாகனம் எத்தனை கிலோ மீட்டர் தூரம் செல்கிறதோ அந்த தூரத்திற்கு ஏற்ப மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

ஜெர்மனியில் உள்ள அனைத்து வாகனங்களிலும் கிட்டத்தட்ட 98.8 சதவீதம் வாகனங்களிலும் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் வாகனம் நுழைந்தவுடன் வரி கணக்கீடு தொடங்கப்படுகிறது. தற்போது, இந்தியாவில் 97 சதவீத வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் முன் போக்குவரத்து கொள்கையிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இதையும் படிக்க… ஹோம் லோன் 20 வருடம்..!! ஈஎம்ஐ 24 வருடம்..!! ஏன் இந்த திடீர் மாற்றம் தெரியுமா..?