சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). இவர், உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, இவர் ஆவடியைச் சேர்ந்த தொலைக்காட்சி துணை நடிகை (வயது 25) ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த துணை நடிகை ஏற்கனவே திருமணம் ஆனவர். தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சந்துருவுக்கும் துணை நடிகைக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் முறையில் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி இரவு இரவு துணை நடிகை, டி.வி. தொடர் படப்பிடிப்புக்காக வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போதும், இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். பிறகு பலமுறை துணை நடிகைக்கு சந்துரு போன் செய்து பார்த்துள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை.
இதனால், மனமுடைந்து போன சந்துரு, வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்த துணை நடிகை, சந்துரு இருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியில் ஆடிப்போனார். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறீத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : மாணவர்களுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?