உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி தீர்ப்பு..!! எஸ்.ஐ. தேர்வு திடீர் ஒத்திவைப்பு..!! தேர்வர்கள் அதிர்ச்சி..!!

SI Exam 2025

ஜூன் 29, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) என மொத்தம் 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

மேலும், இந்த தேர்வு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் தான், உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பால் 20% ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டிஜிபி அலுவலகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக விளக்கங்கள் வரும் வரை ஜூன் 29, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தேர்வுக்கான தேதி TNUSRB இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண் என்ற வகையில் தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More : ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது..!! புது குண்டை தூக்கிப் போட்ட இ – சேவை மையம்..!! அதிர்ச்சியில் குடும்ப தலைவிகள்..!!

CHELLA

Next Post

“மணிவிழா கண்ட தம்பதிகளுக்கு ரூ.2,500 பரிசு”..!! இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Tue Jun 10 , 2025
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த 2,000 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும். அதாவது, ரூ.2,500 […]
temple 1 2

You May Like