கோடையில் வியர்குரு தொல்லையா?… இனி கவலைவேண்டாம்!… இதை டிரை பண்ணுங்க!…

கோடைக்காலங்களில் வியர்குரு பிரச்சனை போக்க உதவும் இயற்கையான டிப்ஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


கோடைகாலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெயிலில் இருந்து நம்மைப்பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவேண்டும். மேலும், தேவையின்றி வெயிலில் செல்வதை தவிர்க்கவும் வேண்டும். மேலும் வெயில் காலத்தில் வியர்க்குரு பிரச்சனைகளால் சிலர் கடும் அவதிக்குள்ளாவார்கள். எரிச்சலையும் தரும். வியர்க்குரு வந்தால், உடல் முழுவதிலும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறி விடும். சிலருக்கு முகத்திலும் வியர்க்குரு வரும். அச்சமயங்களில், அவர்கள் வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காட்டுவார்கள்.வியர்க்குருவைப் போக்க கடைகளில் விற்கும் பவுடர் மற்றும் கிரீம் போன்றவற்றை சிலர் பயன்படுத்துவார்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது தான் வெயிலிலும், வியர்க்குருவிலும் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் துண்டுகள் – 5, கற்றாழை ஜெல் – 3 தேக்கரண்டி, பயன்படுத்தும் முறை: வெள்ளரிக்காயைத் தோல் நீக்கி அதனை நன்றாக மசித்து எடுக்க வேண்டும். இதனுடன் கற்றாழை ஜெல்லைக் கலந்து, நன்றாக குழைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் படும்படி தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு இந்த மாஸ்க் காய்ந்ததும், குளிர்ச்சியான தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். தினந்தோறும் ஒரு வேளை மட்டும் இதனைச் செய்தால் போதும். வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடுவதும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதனால், வெயிலில் இருந்து பாதுகாப்பு மட்டுமின்றி, நம் உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்தந்த காலநிலையில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்த்தாக்குதல் எதுவுமே இருக்காது.

1newsnationuser3

Next Post

மலச்சிக்கல் உள்ளிட்ட சிறுநீரக பிரச்சனையா?… அனைத்துக்கும் ஒரே தீர்வு!… இந்த ஜூஸை 5நாட்கள் மட்டும் குடியுங்கள்!

Tue Mar 7 , 2023
தினந்தோறும் காலை, மாலை என 2 வேளைக்கு பலாப்பழ ஜூஸை, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு குடித்து வந்தால் பாக்டீரியாவினால் உண்டாகும் சிறுநீரக குழாய் தொற்று நோய் குணமடைய உதவுகிறது. முக்கனிகளில் ஒன்றான பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள பலாப்பழத்தின் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்கு உதவுகிறது. பலாக்காயில் கறி சமைக்கலாம். பலாப்பழத்தை இனிப்பாகவும் சேர்த்துக் கொள்ளலாம். பலாக் கொட்டையில் கறி மற்றும் இதர சுவை மிகுந்த உணவுகளை சமைத்துப்சாப்பிடலாம். நன்கு பழுத்த […]

You May Like