தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அறிவியல் பாடம் தொடர்பாக ஒரு பயம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிவியல் பாடத்தின் புதிய வினாத்தாள் வடிவமைப்பு மாணவர்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பொதுவாக […]

பொறியியல் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.