கானாவில் (Ghana) ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து நேற்று (06) காலை 9.12 மணியளவில் அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இதையடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. […]