திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் டில்லிபாபுவை கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து […]