மத்திய வியட்நாமில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, இதனால் 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளின் கூரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக, இப்பகுதியின் பல பகுதிகளில் மழைப்பொழிவு 150 செ.மீட்டரைத் தாண்டியுள்ளது. காபி வளரும் முக்கிய மண்டலங்கள் மற்றும் பிரபலமான கடற்கரை இடங்களுக்கு பெயர் பெற்ற இந்தப் பகுதி, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. […]

